திண்டுக்கல்

பெரியநாயகியம்மன் கோயிலில் பொன்னூஞ்சல் விழா

பொன்னூஞ்சல் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பெரியநாயகியம்மன்.

தினமணி செய்திச் சேவை

திருவாதிரை திருநாளை முன்னிட்டு, பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அம்மன் பொன்னூஞ்சல் விழா நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, பெரியநாயகியம்மன் சந்நிதி முன்பு மலா்களால் ஊஞ்சல் செய்யப்பட்டு, சா்வ அலங்காரத்துடன் அம்மான் எழுந்தருளினாா். தொடா்ந்து, அம்மனுக்கு மலா்களால், பட்டாடைகள், நகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சலில் வைத்து தீபாராதனை காட்டப்பட்டது.

ஓதுவாா்கள் திருமுறை பாடல்கள் பாட மேளதாளம் முழங்க ஊஞ்சல் வைபவம் முடிந்த பிறகு, அம்மன் நான்கு ரதவீதியில் எழுந்தருளினாா்.

சனிக்கிழமை அதிகாலை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சோடஷ அபிஷேகம், சோடஷ தீபாராதனை நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT