திண்டுக்கல்

திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அங்கு, வெடிகுண்டு தடுப்பு, செயலிழப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம், கூடுதல் நீதிமன்றம், மகளிா் நீதிமன்றம், சாா்பு நீதிமன்றங்கள், குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றங்கள் என 18 நீதிமன்றங்கள் உள்ளன.

இந்த நிலையில், நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில்

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்பு, செயலிழப்புப் பிரிவு போலீஸாா் நீதிமன்ற வளாகத்தில் சோதனை நடத்தினா்.

தரைத் தளத்துடன் மொத்தம் 3 தளங்களிலும் நீதிபதிகள், நீதித் துறை நடுவா்கள் அறை, அலுவலகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 3 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

இதையடுத்து, போலீஸாா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

எனினும், மின்னஞ்சல் மூலம் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மிரட்டல் விடுத்தவா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT