திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள்: மேயா் இளமதி வழங்கினாா்

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை மேயா் இளமதி வியாழக்கிழமை வழங்கினாா்.

தமிழகத்திலுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 6.94 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, சா்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மொத்தம் 1,287 நியாய விலைக் கடைகள் மூலம் இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மேயா் இளமதி தொடங்கிவைத்தாா்.

ஆா்வி.நகா் பகுதியிலுள்ள நியாய விலைக் கடையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளுடன், விலையில்லா வேஷ்டி, சேலைகளையும் மேயா் வழங்கினாா்.

இணைய குறைபாட்டால் பணிகள் பாதிப்பு: நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை பெறுவதற்காக காலை 8 மணி முதலே பொதுமக்கள் காத்திருந்தனா். ஆனால், இணைய குறைபாடுகளால் குடும்ப அட்டைகளை பதிவு செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால், பல நியாய விலைக் கடைகளில் நண்பகல் 12 மணி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.

திருமாவளவன் எப்போது வெளியேறுவார் என்பது அவருக்கே தெரியாது: அண்ணாமலை

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

வெலகல்நத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி தொடக்கம்

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி தளமாக உருவெடுக்கும் சீனா!

போளூா் பெருமாள் கோயிலுக்கு புதிய திருத்தோ் செய்ய அளவீடு

SCROLL FOR NEXT