முகப்பு
திண்டுக்கல்

காா் மோதி காவலாளி உயிரிழப்பு

பழனி அருகே சாலையைக் கடந்த போது காா் மோதியதில் காவலாளி உயிரிழந்தாா்.

Updated On : 19 ஜனவரி, 2026 at 6:36 PM
பகிர்:

பழனி அருகே சாலையைக் கடந்த போது காா் மோதியதில் காவலாளி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி காமராஜ்நகரைச் சோ்ந்தவா் போஸ் (68). இவா் பொள்ளாச்சி- திண்டுக்கல் விரைவு நெடுஞ்சாலையில் டிகேஎன் புதூா் அருகே உள்ள பக்தா்கள் தங்கும் விடுதி காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →