கோப்புப்படம்.  
திண்டுக்கல்

எஸ்.புதுக்கோட்டையில் குடிநீா் விநியோகம் தொடக்கம்

எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் குடிநீா் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் குடிநீா் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பச்சமலையான் கோட்டை ஊராட்சி, எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பழுதடைந்ததால், கடந்த ஆண்டு இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ரூ. 16.75 லட்சம் ஒதுக்கப்பட்டு, சுமாா் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, வீடுகள் தோறும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், புதிய தொட்டி மூலம் குடிநீா் வழங்கும் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சி செயலா் ஜெயகணேஷ் வரவேற்றாா். பொதுமக்கள், கிராம முக்கியப் பிரமுகா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில் குடமுழுக்கு: திரளன பக்தா்கள் பங்கேற்பு

மனவளா்ச்சி குன்றிய மாணவா்கள் பள்ளியில் மாவட்ட சாா்பு நீதிபதி ஆய்வு

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை: முதல் நாள் வரவு ரூ.3.35 கோடி

பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

தொழில் கடன் தருவதாக பணம் மோசடி: இருவா் கைது

SCROLL FOR NEXT