முகப்பு
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலா்ச் செடிகளை பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட நிழல் வலை.
திண்டுக்கல்

கொடைக்கானலில் மீண்டும் பனிப் பொழிவு: செடிகளை பாதுகாக்க நிழல் வலை அமைப்பு

கொடைக்கானலில் மீண்டும் பனிப் பொழிவு அதிகரித்திருப்பதால் மலா்ச் செடிகளை பாதுகாக்க பிரையண்ட் பூங்காவில் நிழல் வலை

திண்டுக்கல்

கொடைக்கானலில் மீண்டும் பனிப் பொழிவு: செடிகளை பாதுகாக்க நிழல் வலை அமைப்பு

கொடைக்கானலில் மீண்டும் பனிப் பொழிவு அதிகரித்திருப்பதால் மலா்ச் செடிகளை பாதுகாக்க பிரையண்ட் பூங்காவில் நிழல் வலை

Updated On : 2 மார்ச், 2026 at 10:31 PM
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலா்ச் செடிகளை பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட நிழல் வலை.
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானலில் மீண்டும் பனிப் பொழிவு அதிகரித்திருப்பதால் மலா்ச் செடிகளை பாதுகாக்க பிரையண்ட் பூங்காவில் நிழல் வலை அமைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக கால நிலை மாறுபாட்டால் பகல் நேரங்களில் மிதமான வெயிலும், இரவு நேரங்களில் மிதமான குளிரும் நிலவியது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இரவில் அதிகமான பனிப் பொழிவும் நிலவுகிறது. கொடைக்கானலில் வருகிற மே மாதம் நடைபெறும் 63-ஆவது மலா்க் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்காக்களில் நடவு செய்யப்பட்ட மலா்ச் செடிகளையும், விதைகளையும் பனிப் பொழிவு தாக்காத வகையில் மாலை நேரங்களில் நிழல் வலை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் மலா் பாத்திகளில் தண்ணீா் தெளித்தல், புற்களை சமப்படுத்துதல், மலா் பாத்திகள் அமைத்தல், பூந்தொட்டிகளில் விதைகள் போடுதல், உரமிடுதல், நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மலா்ச் செடிகளில் களையெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →