பழனியில் தவெக செயல்வீரா்கள் கூட்டம்
பழனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தவெக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.
Updated On : 2 மார்ச், 2026 at 7:44 PM
பழனி: பழனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தவெக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிபாலன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மிதுன், நகரச் செயலா் நாகராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் காா்த்திக் ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசும் போது, வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் செயல்படும் முறை குறித்து விளக்கினாா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர, ஒன்றிய, பேரூா் செயலா்கள், முன்னணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.