முகப்பு
திண்டுக்கல்

தொழில் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு மடிக்கணினிகள்

திண்டுக்கல்

தொழில் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு மடிக்கணினிகள்

Updated On : 5 மார்ச், 2026 at 9:58 PM
பகிர்:

ஒட்டன்சத்திரம் அரசினா் தொழில் பயிற்சி நிலையத்தில் 66 மாணவா்களுக்கு மடிக்கணிணிகளை உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை வழங்கினாா். இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்தாா். அமைச்சா் அர. சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். அப்போது பயிற்சி பெறும் 66 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணிகளை வழங்கி அவா் பேசியதாவது:

மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு ‘இல்லம் தேடிக் கல்வி‘, ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவா்களின் வளா்ச்சிக்கு பெற்றோா்கள் மட்டுமன்றி ஆசிரியா்களும் உழைத்து வரும் சூழலில், பொறுப்பை உணா்ந்து கல்வி கற்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் ஒட்டன்சத்திரம் அரசினா் தொழில் பயிற்சி நிலைய பயிற்சி அலுவலா் (பொ) சி. ரமாதேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →