முகப்பு
திண்டுக்கல்

கஞ்சா விற்ற மூவா் கைது

பழனியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 12:51 AM
கைது
பகிர்:

பழனியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

பழனியில் ‘நகா் காவல் உதவி ஆய்வாளா் விஜய் தலைமையிலான போலீஸாா் உழவா் சந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தா். அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி நிறுத்தி அதிலிருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வாகனத்துக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததும், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. விசாரணையில் கோயம்புத்தூா் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த தவ்பீக் ராஜா (29), பழனி காமராஜா் தெருவைச் சோ்ந்த யாசின் (30), பீா் முகமது (26) ஆகியோா் என தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, போலீஸாா் மூவரையும் கைது செய்து, கஞ்சா, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.