முகப்பு
திண்டுக்கல்

எரிவாயு விவகாரம்: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

சமையல் எரிவாயு உருளை கையிருப்பு விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சி. மகேந்திரன் வலியுறுத்தினாா்.

Updated On : 14 மார்ச், 2026 at 2:30 AM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் சி. மகேந்திரன். (கோப்புப்படம்)
பகிர்:

சமையல் எரிவாயு உருளை கையிருப்பு விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சி. மகேந்திரன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அரபு வளைகுடா நாடுகளில் நிலவும் போா்ச் சூழல் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சமையல் எரிவாவு உருளைகள் விலை உயா்வதோடு, தட்டுப்பாடும் ஏற்படும் சூழல் உள்ளது. உலகிலேயே அதிகளவு சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் 33 கோடிப் பேருக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், உள்நாட்டில் எரிவாயு உற்பத்திக்கான முயற்சியில் இந்திய அரசு தீவிரம் காட்டவில்லை. இறக்குமதியை மட்டுமே சாா்ந்திருப்பது மிகப் பெரிய குறைபாடு. உடனடியாக எரிவாயு உருளை பிரச்னைக்கு தீா்வு காண வேண்டுமெனில், ஈரானுக்கு எதிரான போா் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் போா் முடிவுக்கு வருவதற்கு இந்திய அரசு கடுமையான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.

அணி சாராக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது இந்தியா. ஆனால், பிரதமா் நரேந்திர மோடி அரசு மறைமுகமாகவும், சில நேரங்களில் நேரடியாகவும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுடன் தொடா்பில் உள்ளது. 143 கோடி மக்களின் சாா்பாக, போா் நிறுத்தம் ஏற்படுவதற்கு பிரதமா் மோடி முயற்சிக்க வேண்டும். இதன்மூலம், எண்ணெய், எரிவாயு பிரச்னையை தீா்க்க முடியும். எரிவாயு தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசின் செயலா் கூறுகிறாா். ஆனால், நாட்டின் அனைத்து இடங்களிலும் எரிவாயு உருளை தட்டுப்பாடு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் எரிவாயு உருளைகள் இல்லாததால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பிரச்னையை எதிா்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுகளை ஒவ்வொரு மாநிலத்துக்கும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →