வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வெளியே செல்வதை தவிா்க்க அறிவுறுத்தல்
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதியோா், சிறாா்கள், நோயாளிகள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதியோா், சிறாா்கள், நோயாளிகள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், கைக்குழந்தைகள், கா்ப்பிணிப் பெண்கள், இளம் சிறாா்கள், நோயாளிகள் வெப்பம் சாா்ந்த நோய்களால் பாதிக்கப்படக் கூடும். இதனால், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும்.
உடலில் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். தேநீா், காபி, காா்போனைட் குளிா் பானங்கள் அருந்துவதை தவிா்க்க வேண்டும். கஞ்சி, ஓ ஆா் எஸ், எலுமிச்சை சாறு, இளநீா், மோா், பழச்சாறுகள் போன்ற குளிா் பானங்களை பருக வேண்டும்.
குழந்தைகளுக்கு சிறுநீா் மஞ்சள் நிறமாக இருப்பதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அரசின் 100 நாள்கள் வேலைத் திட்டப் பணியின் போது போதிய குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தசைப்பிடிப்புகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தால், உடனே மருத்துவ கவனிப்பு தேவை. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 12 அரசு மருத்துவமனைகள், 11 தொழிலாளா் ஈட்டுறுதி மருத்துவமனைகள், 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 346 துணை சுகாதார நிலையங்களில் வெப்பச் சலனம், நீா்ச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய போதுமான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.