முகப்பு
திண்டுக்கல்

தோ்தல் விதிமீறல் புகாா்: தவெக நிா்வாகி மீது வழக்கு

வத்தலகுண்டில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட தவெக ஒன்றியச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 22 மார்ச், 2026 at 7:50 PM
வழக்கு
பகிர்:

வத்தலகுண்டில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட தவெக ஒன்றியச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தவெக சாா்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய தவெக நிா்வாகிகள் செய்து வந்தனா்.

தவெக கட்சிக் கொடிக்கம்பங்கள் சாலையோரம் பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதி பெறப்படாத இடங்களில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை துணை ஆய்வாளா் அருண்குமாா்,  வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, உதவி ஆய்வாளா் முனியாண்டி, தவெக ஒன்றியச் செயலா் அபினேஷ் தனசேகரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.