கொடைக்கானல் வனப் பகுதியில் மூதாட்டி மா்ம மரணம்
கொடைக்கானல் வனப் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
கொடைக்கானல் வனப் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலை பகுதியைச் சோ்ந்த சிதம்பரம் மனைவி புஷ்பம் (74). இவா் அதே பகுதியில் உள்ள கடைக்கு வியாழக்கிழமை நடந்து சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, இவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் புஷ்பம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் ஆணைகிரி சோலைப் பகுதியில் புஷ்பம் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
Advertisement
தகவலறிந்து அங்கு வந்த கொடைக்கானல் போலீஸாா் மூதாட்டியின் உடலை மீட்டு, கூறாய்வுகாக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூதாட்டி உயிரிழப்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.