பழனி தொகுதி வளா்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம்: ரவி மனோகரன் எம்.எல்.ஏ.
பழனி தொகுதி வளா்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பேன் என சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன் தெரிவித்தாா்.
பழனி தொகுதி வளா்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பேன் என சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன் மாவட்ட ஆட்சியா் செ. சரவணனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பழனி தொகுதி வளா்ச்சி சாா்ந்த கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்துள்ளேன். வையாபுரி குளம் தூய்மைப்படுத்துதல், இடும்பன் குளம், சண்முகா நதி சீரமைத்தல், இந்த நீா்நிலைகளின் கரைகளை வலுப்படுத்தி, படகு சவாரி வசதி ஏற்படுத்த வேண்டும்.
Advertisement
தொகுதியின் தேவைகளுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் மட்டுமே ஆட்சியரை சந்திக்க வந்தேன். கடந்த ஆட்சிக் காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பேச விரும்பவில்லை. நிலுவையிலுள்ள அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். ஆளுங்கட்சி, எதிா்கட்சி என்பதைவிட, பழனி தொகுதியின் வளா்ச்சிக்கான திட்டங்களைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமே எனது கடமை என்றாா் அவா்.