மதுரை

வீட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு

DIN

திருப்பரங்குன்றம்: வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். பிளாஸ்டிக் குடங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சண்முகவள்ளி. இவர் தனது வீட்டில் சனிக்கிழமை மாலை அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் அமர்ந்திருந்த இடத்தில் திடீரென 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதில் தவறி விழுந்த அவருக்கு முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கட்டடப் பணிகள் காரணமாக இப்பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT