மதுரை

போக்குவரத்து விதிமீறல்:  67 ஆட்டோக்கள் பறிமுதல்

DIN

மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 67 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
 மதுரை மாநகரில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.  இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
 இதன் எதிரொலியாக மதுரை நகரில் வியாழன், வெள்ளி இருநாள்களும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மதுரை மாநகரப் போக்குவரத்துப் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாததது போன்ற விதிமீறல்களுக்காக 67 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT