திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியலில் ரூ. 27 லட்சத்து 37 ஆயிரத்து 532 ரூபாய் வருமானமாக கிடைத்தது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இக்கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டது. அதில் ரொக்கமாக ரூ. 27 லட்சத்து 37 ஆயிரத்து 532 ரூபாய், தங்கம் - 284 கிராம், வெள்ளி - 1 கிலோ கிடைத்துள்ளது.
கோயில் துணை ஆணையர் ப. கவிதா பிரியதர்சினி, அழகர்கோயில் துணை ஆணையர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயா பாடசாலை மாணவர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.