மதுரை

திருப்பரங்குன்றம்  கோயில்  உண்டியல் வருமானம்  ரூ.27 லட்சம்

DIN

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியலில் ரூ. 27 லட்சத்து 37 ஆயிரத்து 532 ரூபாய் வருமானமாக கிடைத்தது. 
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.  இக்கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டது. அதில் ரொக்கமாக ரூ. 27 லட்சத்து 37 ஆயிரத்து 532 ரூபாய்,  தங்கம் - 284 கிராம், வெள்ளி - 1 கிலோ கிடைத்துள்ளது.
கோயில் துணை ஆணையர் ப. கவிதா பிரியதர்சினி,  அழகர்கோயில் துணை ஆணையர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில்,  ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயா பாடசாலை மாணவர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT