மதுரை

சமையல் செய்யும்போது ஆடையில் தீப்பற்றி பெண் சாவு

DIN

மதுரை மாவட்டம் எழுமலை அருகே சமையல் செய்யும் போது ஆடையில் தீப்பற்றியதில் பெண் உயிரிழந்ததாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொட்டல்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி பாண்டியம்மாள் (28).  சம்பவத்தன்று இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஆடையில் தீப்பற்றியது. அவரை, கணவர் மாரியப்பன் காப்பாற்ற முயன்றார். இதில் இருவரும் பலத்த காயமடைந்து  உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி பாண்டியம்மாள் உயிரிழந்தார். கணவர் மாரியப்பன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து பாண்டியம்மாளின் சகோதரர் மலைராஜ் அளித்தப் புகாரின் பேரில் எழுமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT