தியாகி கக்கன் 108-ஆவது பிறந்தநாளையொட்டி, அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ், தும்பைப்பட்டியிலுள்ள கக்கன் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆட்சியருடன் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், மேலூர் நகராட்சி முன்னாள் தலைவர் செ.சரவணன், கொட்டாம்பட்டி ஊராட்சித் தலைவர் வெற்றிச்செழியன், அதிமுக மேலூர் மாணவரணிச் செயலர் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.