மதுரை

விளக்கேற்றும்போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

DIN

மதுரையில் துளசிமாடத்தில் விளக்கேற்றியபோது சேலையில் தீப்பிடித்ததால் காயமடைந்த மூதாட்டி சனிக்கிழமை இறந்தார்.
மதுரை எஸ்.எஸ்.காலனி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் மீனாட்சி (79).  இவர் சம்பவத்தன்று அங்குள்ள துளசி மாடத்தில் விளக்கேற்றியபோது சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இறந்தார். இதுதொடர்பாக அவரது மகன் நடராஜன் அளித்தப் புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT