மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விப் பிரிவில் ஏற்கெனவே 30 பேர் இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இப்பல்கலைக் கழகத்தில் பதிவாளர் பொறுப்பு வகித்த பேராசிரியர் கு.ஆறுமுகம் சில வாரங்களுக்கு முன் 147 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அதன்படி தொலைநிலைக் கல்விப் பிரிவிலிருந்து மட்டும் 30 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்ற பி.பி.செல்லத்துரை நிர்வாக ரீதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி பணி விரைவு நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஏற்கெனவே இடமாறுதலுக்கு உள்ளான தொலைநிலைக் கல்விப் பிரிவைச் சேர்ந்த 30 பேரை மீண்டும் தொலைநிலைக் கல்விப் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதாக பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.