மதுரை

வண்டல் மண் அள்ள ஜமாபந்தியில் அனுமதி

DIN

உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் விவசாயிகளுக்கு வண்டல்மண் எடுப்பதற்கு ஆணை வழங்கப்பட்டது.
சிந்துபட்டி உள்வட்ட ஜமாபந்தி உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முழுப்புல பட்டா  23, உள்பிரிவு  57, முதியோர் உதவித்தொகை 32 உள்பட 154 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், சிந்துபட்டி பகுதி விவசாயிகள் 9 பேர் வண்டல் மண் அள்ள அனுமதி கோரி மனு அளித்தனர். வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் வாலாந்தூர் உள்பிரிவுகளில் வண்டல்மண் அள்ள அனுமதிகோரி 4 பேர் மனு அளித்திருந்தனர். இவர்கள் 9 பேருக்கும் வண்டல்மண் அள்ளுவதற்கான அனுமதியை மாவட்ட வருவாய் அலுவலர் வேலுச்சாமி வெள்ளிக்கிழமை வழங்கினர். வட்டாட்சியர் செ.ராமச்சந்திரன் மற்றும் கிராம நிர்வாக
அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நவீன சிகிச்சை

மூலைக்கரைப்பட்டியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நிறுவன தினம்...

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக் கடை உரிமையாளா் மரணம்

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

SCROLL FOR NEXT