முகப்பு
மதுரை

அழகர்கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 37.50 லட்சம்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயில், சோலைமலை முருகன்கோயில்களின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயில், சோலைமலை முருகன்கோயில்களின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக மொத்தம்  ரூ. 37.50 லட்சம் செலுத்தியிருந்தனர்.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூ.27 லட்சத்து 91ஆயிரத்து 320-மும், 63 கிராம் தங்கம் , 162கிராம் வெள்ளியும் இருந்தது.
சோலைமலை முருகன்கோயிலில் உண்டில்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூ. 9 லட்சத்து 59 ஆயிரத்து 367-மும்,  37 கிராம் தங்கம்,  526 கிராம் வெள்ளியும்  இருந்தன. கள்ளழகர் திருக்கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் கோயில் நிர்வாக அதிகாரி கவிதாபிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →