மதுரை

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் சாவு

DIN

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே புதன்கிழமை மின் பழுதை நீக்கச்சென்ற மின் ஊழியர் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
  சமயநல்லூர் அருகே உள்ள ஊர்மெச்சிக்குளத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம்(51). சமயநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் வயர் மேனாகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நகரி பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனிச்சியம் பீடர் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறி பழுதை நீக்கியுள்ளார். பின்னர் அதில் இருந்து இறங்கும் போது மகாலிங்கம் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மின் கம்பத்திலேயே  இறந்தார். தகவலின்பேரில்  சமயநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச்சென்று மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த மகாலிங்கத்தின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  மேலும் அவரது மகன் சுந்தர் அளித்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT