சிறையில் கஞ்சா பதுக்கிய கைதி மீது வழக்கு
மதுரை மத்திய சிறையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கைதி மீது, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மதுரை மத்திய சிறையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கைதி மீது, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மதுரை மத்திய சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை சில கைதிகள் பயன்படுத்துவதாக, சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறை அதிகாரிகள், கைதிகள் அறையில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரை ஆனையூரைச் சேர்ந்த நாராயணன் ( 45) என்ற கைதி அறையில் சோதனையிட்ட போது, கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே, அந்த கஞ்சாவை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து சிறை அதிகாரி உதயகுமார் அளித்த புகாரின்பேரில், கைதி நாராயணன் மீது சிறை நன்னடத்தை விதிகளை மீறியதாக, கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.