மதுரை

காஷ்மீர் சிறுமி பாலியல் கொலை: பெண்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

DIN

ஜம்மு - காஷ்மீரில் சிறுமியை பாலியல் கொலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  மதுரை மாநகர பெண்கள் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பெண்கள் துணைக்குழு உறுப்பினர் அமுதா தலைமை வகித்தார். இதில், ஜனநாயக மாதர் சங்க மாநகர் மாவட்ட  செயலர் ஆர்.சசிகலா கண்டன உரையாற்றினார்.
 ஆர்ப்பாட்டத்தில், இந்திய தேசிய மாதர் சம்மேளன மாநில நிர்வாகி ராஜலெட்சுமி, ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் கே.ராஜேஸ்வரி, அறிவியல் இயக்க நிர்வாகி வெண்ணிலா, ஏக்தா அமைப்பின் நிர்வாகி அனிதா தீபம்,  சிஐடியு உழைக்கும் பெண்கள் அமைப்பு, எல்ஐசி மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT