மதுரை

டிராபிக் ராமசாமி மருத்துவமனையில் அனுமதி 

DIN

பாஜகவினரால் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை அகற்றக் கோரி மதுரையில் திங்கள்கிழமை போராட்டம்  நடத்திய டிராபிக் ராமசாமி திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்காக மதுரை வந்திருந்த அவர் பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலமாசி வீதி- தெற்குமாசி வீதி சந்திப்பு பகுதியில் பாஜகவினரால் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றக் கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராட்டத்தைத் தொடர்ந்த அவர் திடீரென மயக்கமடைந்ததையடுத்து அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் தங்கியிருக்கும் விடுதிக்குச் சென்றார் என போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT