மதுரை

குவாரி தண்ணீரில் இளைஞர் மூழ்கிச் சாவு 

தினமணி

உசிலம்பட்டி அருகே கல் குவாரியில் தேங்கிய நீரில் செவ்வாய்க்கிழமை இளைஞர் மூழ்கி உயிரிழந்தார்.
உசிலம்பட்டி வட்டம் உத்தப்பநாயக்கனூர் அருகே உள்ள மாரிப்பட்டியை சேர்ந்த மாரி மகன் சிவா (22). இவர் கிராமத்திற்கு அருகே உள்ள கல்குவாரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்று உள்ளார். குவாரியில் மூழ்கிக் குளித்த அவர் நீரின் மேல்பகுதிக்கு மீண்டும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உசிலம்பட்டி தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் தீ அணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிவாவின் சடலத்தை மீட்டனர். 
பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து உத்தப்பநாயக்கனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT