மதுரை

கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி

DIN

கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடியில் உள்ள சந்திவீரன்கோயில் காளை வெள்ளிக்கிழமை இரவு இறந்தது. இறந்த காளையின் உடலுக்கு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
கருங்காலக்குடி கோயில் காளை ஏராளமான ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இந்த காளை வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தது.
இதையறிந்த கருங்காலக்குடி கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து காளைக்கு வேட்டி, துண்டு, மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சனிக்கிழமை காளையின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT