முகப்பு
மதுரை

மதுரைக் கோட்டத்தில் பராமரிப்பு பணி: ரயில்கள் நேரத்தில் மாற்றம்

மதுரைக் கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக பயணிகள் ரயில்களின் நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

மதுரைக் கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக பயணிகள் ரயில்களின் நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் (வண்டி எண் 56769): ஜூன் 6 முதல் 30 ஆம் தேதி வரை திங்கள் , செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் (56769) ஜூன் 6 முதல் 30 ஆம் தேதி வரை, புதன் மற்றும் சனிக்கிழமைகளில், மதுரை மற்றும் திருநெல்வேலி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில்(56770): ஜூன் 6 முதல் 30 ஆம் தேதி வரை, புதன் மற்றும் சனிக்கிழமைகளில், மதுரையிலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும்.
திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில்(56770): ஜூன் 6 முதல் 30 ஆம் தேதி வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில், திருநெல்வேலி மற்றும் மதுரை இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் (56770): ஜூன் 6 முதல் 30 ஆம் தேதி வரை திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருநெல்வேலி மற்றும் விருதுநகர் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி - ராமேசுவரம் பயணிகள் ரயில்(56829): ஜூன் 11 முதல் 30 ஆம் தேதி வரை பரமக்குடி-ராமேசுவரம் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
ராமேசுவரம் - திருச்சி பயணிகள் ரயில் (56830): ஜூன் 6 முதல் 30 ஆம் தேதி வரை ராமேசுவரம்-பரமக்குடி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில்(56320): ஜூன் 6 முதல் 16 ஆம் தேதி வரை மதுரை, மானாமதுரை மற்றும் விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →