மதுரை

மதுரை மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி

DIN

மதுரை மாவட்ட மைய நூலகத்தில் வரும் 15 ஆம் தேதி வியாழக்கிழமை குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது என நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
      இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: மதுரையில் தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி புதன்கிழமை நியூசெஞ்சுரி புத்தக நிறுவன வளாகத்தில் தள்ளுபடி விலையுடன் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.
 மேலும், வரும் 15 ஆம் தேதி வியாழக்கிழமை சிம்மக்கல்லில் உள்ள மதுரை மாவட்ட மைய நூலக வளாகத்தில் தேசிய புத்தக வார விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.
       புத்தகக் கண்காட்சியில் பத்து சதவிகிதம் தள்ளுபடி விலையில் அனைத்துப் புத்தகங்களும் விற்கப்படவுள்ளன. மேலும், குழந்தைகளுக்கான சிறப்பு புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. 
  சாகித்திய அகாதெமி பதிப்பு நூல்களும், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா பதிப்பு நூல்களும் விற்கப்படவுள்ளன. மாவட்ட மைய நூலகமும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சியில் அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரும் பங்கேற்று புத்தகங்களை சலுகை விலையில் வாங்கிச் செல்லலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT