உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச்செயலர் மறைந்த தொழிலதிபர் மணிமொழியனாரின் 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை காலேஜ் ஹவுஸ் வளாகம் மணிமொழியனார் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரவையின் மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் தலைமை வகித்தார். தொழிலதிபர் டி.ஆர்.ஜி.குணசேகரன், டாக்டர் அறிவாசகம், தமிழிசைச் சங்கம் மோகன்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை பேரவையின் மதுரை மாவட்டத் தலைவர் கா.கருப்பையா தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மணிமொழியனார் உருவப் படத்துக்கு முன்னாள் மேயர் பெ.குழந்தைசாமி, திமுக மாவட்டப் பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதி, பேராசிரியர் ரா.மோகன், மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநிலப் பொதுச்செயலர் க.ஜான்மோசஸ், முன்னாள் காவல்துறை அதிகாரி காசிம் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். முன்னதாக பேரவை செயலர் கவிஞர் மார்சல் முருகன் வரவேற்றார். கவிஞர் அசோக்ராஜ் நன்றி கூறினார்.