மதுரை

காரில் கடத்திய 2,000 மதுபாட்டில்கள் பறிமுதல்

DIN


மதுரையில் காரில் கடத்தி வரப்பட்ட 2,000 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து தப்பிச்சென்ற இருவரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக மாநகர மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சார்பு ஆய்வாளர் விமலா தலைமையில் போலீஸார் அண்ணாநகர் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்திய போது, அதில் இருந்த இருவர் தப்பிச் சென்றனர். இதையடுத்து காரை சோதனையிட்டபோது காரில் வெளி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 2,000 மதுபாட்டில்கள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கார் மற்றும் மதுபாட்டில்களை போலீஸார் கைப்பற்றி தப்பிச்சென்ற இருவரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT