மதுரை

ஊரக ஆயுதப்படையில்  நூலகம் திறப்பு

DIN

மதுரை ஊரக ஆயுதப்படையில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான நூலகத்தை மதுரை சரக துணைத் தலைவர் பிரதீப்குமார் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
மதுரை ஊரக ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான நூலகம் அமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து நூலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை சரக காவல்துறைத் துணைத்தலைவர் பிரதீப் குமார் பங்கேற்று நூலகத்தை திறந்து வைத்தார். மேலும் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள நூல்களை பார்வையிட்டார். விழாவில் ஊரகக்காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நூலகத்தில் பல்வேறு எழுத்தாளர்களின் கதைகள், பொது அறிவு நூல்கள், போட்டித்தேர்வுக்கான நூல்கள் உள்பட பல்வேறு நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குழந்தைகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஊரகக்காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT