முகப்பு
மதுரை

முன்னாள் வங்கி அதிகாரி வீட்டில் 23 பவுன் நகைகள் திருட்டு

மதுரையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து 23 பவுன் நகைகள் திருடப்பட்டதாக சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:48 AM
பகிர்:

மதுரையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து 23 பவுன் நகைகள் திருடப்பட்டதாக சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மதுரை தபால்தந்தி நகர் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராமன்(62). அரசு வங்கியில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சனிக்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 23 பவுன் நகைகள் திருடிச்சென்றது தெரிந்தது. சம்பவம் தொடர்பாக சுந்தர்ராமன் அளித்தப் புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.