மதுரை

ஆட்டோ மீது கார் மோதி ஓட்டுநர் சாவு

DIN

மதுரை அருகே ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
  மதுரை அய்யர்பங்களா உச்சபரம்புமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(45). ஆட்டோ ஓட்டுநரான முருகன் பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சென்றுள்ளார். துவரிமான் சந்திப்பில் சென்ற போது எதிரே வந்த கார், ஆட்டோ மீது மோதியது. 
  இதில் பலத்த காயமடைந்த முருகனை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட முருகன் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார். விபத்துத் தொடர்பாக அவரது மனைவி முருகேஸ்வரி(40) அளித்தப் புகாரின்பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT