மதுரை

திருமங்கலம் அருகே அரசுப் பேருந்து சிறை பிடிப்பு

DIN

இமானுவேல் சேகரன் நினைவிடம் செல்ல பேருந்து வசதி செய்து தரக்கோரி அரசு பேருந்துகளை திருமங்கலம் அருகே கிராம மக்கள் செவ்வாய்கிழமை சிறைபிடித்தனர்.  
 திருமங்கலத்தை அடுத்த சுங்குராம்பட்டி கிராமத்தினர் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடி செல்ல செவ்வாய்கிழமை முடிவு செய்திருந்தனர்.  இதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன் மதுரை புறவழிச் சாலையில் உள்ள அரசுப் பேருந்து பணிமனை மேலாளரிடம் கிராமத்திலிருந்து பரமக்குடி செல்ல தனிப் பேருந்து வசதி செய்து தர கோரிக்கை விடுத்திருந்தனராம். மேலாளரும் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்கிழமை பேருந்து வரவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் திருமங்கலத்திலிருந்து விமான நிலையம் செல்லும் இரு பேருந்துகளை சுங்குராம்பட்டி விலக்கு அருகே சிறைபிடித்தனர். இதையடுத்து திருமங்கலம் ஊரக துணைகாவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் பொதுமக்களை சமாதானம் செய்து சுங்குராம்பட்டியிலிருந்து எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் வரை செல்ல பேருந்து வசதி செய்து கொடுத்தனர். இதையடுத்து சிறைபிடித்த பேருந்துகளை கிராம மக்கள் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT