மதுரை

கருமாத்தூரில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி

DIN

உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் தேசிய மாணவர் படை மற்றும் சமூக கல்வித் திட்டம்(அரைஸ்)இணைந்து தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணியை புதன்கிழமை நடத்தின.
கல்லூரியின் முதல்வர் பேசில் சேவியர் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி கல்லூரியிலிருந்து கருமாத்தூர் கரிசல்பட்டி வரை சென்றடைந்தது. பின்னர் கரிசல்பட்டி கிராமத்தை தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் தூய்மைப்படுத்தினர். மேலும் திண்டுக்கல் பட்டாலியன்  ஹவில்தார் வெங்கடேஷ் , ராஜ்பகதூர் யாதவ் மற்றும் உசிலம்பட்டி தேசிய மாணவர் படை அதிகாரி ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளை ஊக்கப்படுத்தினர். முன்னதாக அரைஸ் விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் நிர்மல் ராஜ்குமார் வரவேற்றார். தேசிய மாணவர் படை அதிகாரி ஆரோக்கிய மரிய மைக்கேல் ராஜா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT