மதுரை மாவட்ட எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வழங்கல் துறை அலுவலர்கள், எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு உருளை விநியோகஸ்தர்கள் கலந்து கொள்கின்றனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எரிவாயு உருளை நுகர்வோர் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாலசுப்பிரமணி தெரிவித்துள்ளார்.