மதுரை

கால்வாயில் மூழ்கி கட்டடத் தொழிலாளி சாவு

DIN

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் கால்வாயில் மூழ்கி கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். 
பைக்காரா பாலநாகம்மாள் கோயில் தெருப் பகுதியைச் சேர்ந்தவர் பாபு(35). கட்டடத் தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் வடிவேல்கரையில் உள்ள நிலையூர் கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளார். அங்கு ஆழமான பகுதியில் குளித்தபோது பாபு நீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை தீயணைப்புப் படையினர் பாபுவின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார்  விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT