மதுரை

கேசவ சேவா கேந்திரம் சார்பில் குருதிக் கொடையாளர் இணையதளம்

DIN

மதுரை கேசவ சேவா கேந்திரம் சார்பில் குருதிக் கொடையாளர்களுக்கான இணையதளம்  புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
 தென்தமிழகத்தில் உள்ள குருதிக் கொடையாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கேசவ சேவா கேந்திரம் சார்பில் இந்த இணையதளம் (w‌w‌w.​b‌h​a‌r​a‌t‌h​a​b‌l‌o‌o‌d.‌i‌n) அமைக்கப்பட்டுள்ளது.  குருதிக் கொடையாளர்கள் மற்றும் ரத்தம் தேவைப்படுவோர் பயன்படுத்தும் வகையில் இந்த இணையதளம் செயல்படும். பல்வேறு இடங்களிலும் நடைபெறும் ரத்த தான முகாம்கள், ரத்த வங்கிகள், குருதிக் கொடையாளர்களின் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்னிந்திய அமைப்பாளர் கோ.ஸ்தாணுமாலையன் இந்த இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.  கேசவ சேவா கேந்திரத்தின் அறங்காவலர்கள் க. சந்திரன், க.சேகர், ஹரிபாபு, நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT