மதுரை

நிலம் வாங்கித் தருவதாகபெண்ணிடம் ரூ. 3 லட்சம் மோசடி

DIN

மதுரையில் நிலம் வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. 3 லட்சத்தை பெற்று மோசடி செய்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்பாபு மனைவி புவனேஸ்வரி (37). இவா் அதே பகுதியில் ஆயுா்வேத மருந்தகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், மதுரையைச் சோ்ந்த தென்பாண்டியன் என்பவா் கூடல்புதூா் பகுதியில் வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி முன்பணமாக ரூ.3 லட்சத்தை புவனேஸ்வரிடம் பெற்றுள்ளாா்.

ஆனால், அவா் கூறியபடி வீட்டுமனை வாங்கித் தரவில்லை. புவனேஸ்வரி பலமுறை பணத்தை கேட்டும் தென்பாண்டியன் திரும்ப தரவில்லை. இதையடுத்து புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் கரிமேடு போலீஸாா் சனிக்கிழமை தென்பாண்டியன் உள்பட 3 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT