மதுரை

பைக் மோதியதில் மூதாட்டி சாவு

DIN

மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
    சாப்டூர் அருகே உள்ள குடிசேரியைச் சேர்ந்த முனியாண்டி மனைவி கருப்பாயி (70). 
  இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் கருப்பாயி மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். 
    அப்பகுதியினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கருப்பாயி உயிரிழந்தார். இதுதொடர்பாக சாப்டூர் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய முனிச்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT