மதுரை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ரூ.1.20கோடி மதிப்பில் 100 கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தனிக்கழிப்பறைகளை வரும் கல்வியாண்டில் கட்டுவதற்கு கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதன்படி மதுரை மாவட்டத்தில் 42 தொடக்கப் பள்ளிகள், 28 நடுநிலைப் பள்ளிகள், 8 உயர்நிலைப் பள்ளிகள், 18 மேல்நிலைப்பள்ளிகளில் தலா ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன. வரும் கல்வியாண்டில் மாணவர்கள் பயன்பாட்டுக்கு வரும்படி பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக அரசுப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் தொடர்பான விவரங்கள் மாவட்டமுதன்மை கல்வி அலுவலகம் மூலமாக சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தொடங்கவுள்ள கழிப்பறை கட்டுமானப் பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.