மதுரை

குழந்தைகள் வளர்ச்சித் திட்ட  கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்

DIN

திருமங்கலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகக் கண்காணிப்பாளர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
திருமங்கலம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் பத்மநாபன். இவர் கள்ளிக்குடி பகுதியில் பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பத்மநாபன் முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதியானதாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காணிப்பாளர் பத்மநாபன் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT