மதுரை

சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் பலி: காமராஜர் பல்கலை.யில் அஞ்சலி

DIN

காஷ்மீர் மாநிலத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் பலியான 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. 
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்து வீரர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் கே.சின்னையா, டீன் நல்லகாமன், தேர்வுகள் துறை கட்டுப்பாட்டு அதிகாரி ரவி மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 
பல்கலைக்கழக கல்லூரி: மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பி.ஜார்ஜ் தலைமை வகித்து வீரர்களின் படத்துக்கு மலர்அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவியர் அஞ்சலி செலுத்தினர்.
மதுரைக்கல்லூரியில்...: மதுரைக்கல்லூரியில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுரேஷ் தலைமை வகித்து அஞ்சலி செலுத்தினார். கல்லூரி வாரிய உறுப்பினர் இல.அமுதன் மற்றும் துறைத்தலைவர்கள், மாணவ, மாணவியர் அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT