மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் தமிழர் ஆய்வு மையம் சார்பில் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தமிழர் ஆய்வு மையத்தின் தலைவர் வழக்குரைஞர் சி.சே.ராஜன் தலைமை வகித்தார். திருவள்ளுவரின் நினைவாக சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைக்கு குறள் வழிச் சாலை எனப் பெயரிட தமிழர் ஆய்வு மையம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருவது குறித்து அவர் பேசினார்.
இந்த கோரிக்கையை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணலாம் என்றும் அதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் வழக்குரைஞர்கள் ஹென்றி திபேன், ஆர்.அழகுமணி, வாஞ்சிநாதன் ஆகியோர் உறுதி அளித்தனர். பாரதி தேசிய பேரவையின் தலைவர் க. ஜான்மோசஸ், அருள்திரு பால்மைக், பத்திரிகையாளர் ப. திருமலை, சமம் குடிமக்கள் பொதுச் செயலர் சண்முகவேலு உள்ளிட்டோரும் விழாவில் பேசினர்.னர்.