மதுரை

எழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை:  ரூ.3.5 லட்சம் பறிமுதல்: எழுத்தர் கைது    

DIN

மதுரை மாவட்டம் எழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை  லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்து கணக்கில் வராத  ரூ.3 லட்சத்து  50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக எழுத்தர் கைது செய்யப்பட்டார்.
உசிலம்பட்டி அருகே  எழுமலை பேரூராட்சியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சார் பதிவாளர் கிருஷ்ணம்மாள் விடுமுறை என்பதால் எழுத்தர் ராஜ்குமார் அலுவலக பொறுப்பில் இருந்தார். போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் சிக்கியது. அப்பணத்தை போலீஸார் பறிமுதல் செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். போலீஸார் இரவு 7.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை இச்சோதனையில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT