கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜன.21)மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் மாலை 4 மணி வரை, கொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, சொக்கலிங்கபுரம், சொக்கம்பட்டி, தொந்திலிங்கபுரம், வி.புதூர், மணப்பச்சேரி, வெள்ளிமலை, வெள்ளாளபட்டி, மணல்மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, வெள்ளினிப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, மதுரை கிழக்கு மின் பகிர்மன வட்டச் செயற்பொறியாளர் இரா. கண்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பாலை பகுதியில்
ஜன.22 இல் மின்தடை
மதுரை, ஜன. 19: திருப்பாலை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 22) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 வரை திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர் பங்களா, வள்ளுவர் காலனி, விஸ்வநாதபுரம், சூலமங்கலம், கண்ணனேந்தல், சூர்யா நகர், ஊமச்சிகுளம், அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை, வலையபட்டி, கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, மின்வாரியம் தெரிவித்துள்ளது.