மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரைப் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பேரையூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, விருதுநகரில் உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி, படித்து வருகிறார். அவர் விடுமுறைக்கு பேரையூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் பள்ளிக்கு சென்றார். அப்போது பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி(20) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மாணவியைக் கடத்த முயன்று, பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில், பேரையூர் போலீஸார் புண்ணியமூர்த்தியை "போக்ஸோ' சட்டத்தில் கைது செய்தனர்.